24 6725d06e36db1
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் 8ல் புதிதாக களமிறங்கிய 6 போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி

Share

பிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என தகவல் வெளிவந்துவிட்டது. அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறினார் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை, எலிமினேஷன் கிடையாது என உறுதிசெய்யப்பட்டது.

அதே போல் வைல்டு கார்டு என்ட்ரி குறித்தும் நேற்று வெளிவந்த தகவலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. டி.எஸ்.கே, ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய 5 போட்டியாளர்கள் புதிதாக களமிறங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது.

ஆனால், இதில் டி.எஸ்.கே பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு என்ட்ரியாக வரவில்லை, அது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. ஆனால், ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் நால்வருடன் இணைந்து தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராயன் மற்றும் ரீடா தியாகராஜன் என்பவரும் வைல்டு கார்டு என்ட்ரியில் வந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக 6 பேர் களமிறங்கியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் பிக் பாஸ் களம் இனி வரும் நாட்களில் எப்படி இருக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...