Bigg Boss Tamil Poster
சினிமாசெய்திகள்

எலிமினேட் ஆன சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை.. வழியனுப்ப வெளியே கூட வராத முத்துக்குமரன்!

Share

எலிமினேட் ஆன சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை.. வழியனுப்ப வெளியே கூட வராத முத்துக்குமரன்!

பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இன்று சிவக்குமார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி 4 போட்டியாளர்களுக்கு ஒரு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் சிவக்குமார் தான் எலிமினேஷன் என தெரியவந்தது. அதை அவரும் பெரிய அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாக வெளியில் கிளம்பும் வேலையை பார்த்தார்.

எல்லோர் முன்பும் தான் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு போக வேண்டும் என சொல்லி தனது கதையை 5 நிமிடம் சொன்னார் சிவக்குமார். மேலும் போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் தீபக் திமிர் பிடித்தவர் என நினைத்துகொண்டு தான் உள்ளே வந்தேன், அவரை முறைத்து கொண்டு நின்றேன், ஆனால் அவர் அப்படியே opposite என்பது இப்போது புரிந்துகொண்டேன் என கூறினார்.

மற்ற போட்டியாளர்கள் பற்றி அவர் பேசியது ஒளிபரப்பாகவில்லை.

சிவக்குமார் வெளியில் கிளம்பும்போது அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். அனைவரும் அவரை வழியனுப்ப வாசல் வரை வந்தனர். ஆனால் முத்துக்குமரன் மட்டும் வரவில்லை.

ஏன் அப்படி செய்தார். முத்துக்குமரன் பற்றி சிவக்குமார் ஏதோ பேசி இருக்கிறார், அதனால் தான் இப்படி ஆகி இருக்கிறது.

‘உங்களால் முடியாது என சொல்வாங்க. நம்பாதீங்க. பின்னாடி பேசுறவங்க எல்லாருக்கும் சொல்றேன்’ என சிவக்குமார் வெளியேறும்போது முத்துகுமாரனை பார்த்து ஒரு வரி கூறினார். ‘வாழ்க்கைல சொல்றேன், இங்க இல்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.

இதை கேட்டுவிட்டு தான் முத்துக்குமரன் அவரை வழியனுப்ப செல்லாமல் மீண்டும் உள்ளே சென்று தூரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...