Bigg Boss Tamil Poster
சினிமாசெய்திகள்

எலிமினேட் ஆன சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை.. வழியனுப்ப வெளியே கூட வராத முத்துக்குமரன்!

Share

எலிமினேட் ஆன சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை.. வழியனுப்ப வெளியே கூட வராத முத்துக்குமரன்!

பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இன்று சிவக்குமார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி 4 போட்டியாளர்களுக்கு ஒரு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் சிவக்குமார் தான் எலிமினேஷன் என தெரியவந்தது. அதை அவரும் பெரிய அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாக வெளியில் கிளம்பும் வேலையை பார்த்தார்.

எல்லோர் முன்பும் தான் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு போக வேண்டும் என சொல்லி தனது கதையை 5 நிமிடம் சொன்னார் சிவக்குமார். மேலும் போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் தீபக் திமிர் பிடித்தவர் என நினைத்துகொண்டு தான் உள்ளே வந்தேன், அவரை முறைத்து கொண்டு நின்றேன், ஆனால் அவர் அப்படியே opposite என்பது இப்போது புரிந்துகொண்டேன் என கூறினார்.

மற்ற போட்டியாளர்கள் பற்றி அவர் பேசியது ஒளிபரப்பாகவில்லை.

சிவக்குமார் வெளியில் கிளம்பும்போது அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். அனைவரும் அவரை வழியனுப்ப வாசல் வரை வந்தனர். ஆனால் முத்துக்குமரன் மட்டும் வரவில்லை.

ஏன் அப்படி செய்தார். முத்துக்குமரன் பற்றி சிவக்குமார் ஏதோ பேசி இருக்கிறார், அதனால் தான் இப்படி ஆகி இருக்கிறது.

‘உங்களால் முடியாது என சொல்வாங்க. நம்பாதீங்க. பின்னாடி பேசுறவங்க எல்லாருக்கும் சொல்றேன்’ என சிவக்குமார் வெளியேறும்போது முத்துகுமாரனை பார்த்து ஒரு வரி கூறினார். ‘வாழ்க்கைல சொல்றேன், இங்க இல்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.

இதை கேட்டுவிட்டு தான் முத்துக்குமரன் அவரை வழியனுப்ப செல்லாமல் மீண்டும் உள்ளே சென்று தூரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...