8 15
சினிமாசெய்திகள்

மகாலட்சுமி அப்போவே சொன்னா.. கதறி அழுத ரவீந்தர்! பெண் போட்டியாளர் பேச்சு தான் காரணம்

Share

மகாலட்சுமி அப்போவே சொன்னா.. கதறி அழுத ரவீந்தர்! பெண் போட்டியாளர் பேச்சு தான் காரணம்

பிக் பாஸ் என்றால் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது தொடங்கி இருக்கும் பிக் பாஸ் 8வது சீஸனும் விதிவிலக்கு அல்ல.

இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் எல்லோருடனும் கலந்துரையாடினார். அப்போது ரவீந்தர் செய்த பிராங்க் மற்றும் அதனால் வந்த மனக்கசப்பு ஆகியவை பற்றியும் அவர் பேசினார்.

அப்போது பேசிய RJ ஆனந்தி, “ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் சண்டை போடும்போது அது ட்ராமாவாக இருக்குமோ என ஆரம்பத்திலேயே சந்தேகம் வந்தது.”

“பொதுவாக ரவீந்தர் உட்கார்ந்து இருப்பார். தண்ணி உட்பட எதுவேண்டும் என்றாலும் நாங்கள் தான் கொண்டு வந்து கொடுப்போம். அப்போது கூட எழுந்து கொள்ளாத மனுஷன் prank செய்ய எழுந்து நின்று ஒருவிஷயம் செய்தார்.”

“அதை செய்ய முடியும் அவர், எங்களிடம் வேலை வாங்கும்போது எங்களை பயன்படுத்திவிட்டாரே என தான் தோன்றியது” என ஆனந்தி கூறினார்.

விஜய் சேதுபதி ஷோ முடித்துவிட்டு சென்றபிறகு ரவீந்தர் இது பற்றி நினைத்து கண்ணீர் விட்டார்.

நான் கால் வலிக்கிறது என்பதால் தான் கேட்டேன். நான் உட்கார்ந்து கொண்டு வேலை வாங்குகிறேன் என சொல்கிறார். அதை கேட்கும்போது எனக்கு அப்படி இருந்தது. என் மனைவி மஹாலக்ஷ்மி அப்போதே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று” என கூறி ரவீந்தர் கண்ணீர் விட்டார்.

பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

love story 1769079434
பொழுதுபோக்குசினிமா

காதலர் தினத்தில் மீண்டும் சாய் பல்லவி – நாக சைதன்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

சேகர் கம்முல்லா இயக்கத்தில் வெளியாகி தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனை படைத்த ‘லவ் ஸ்டோரி’...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...