சினிமாசெய்திகள்

வணங்கான் படத்தை நம்பி சம்பளத்தை ஏற்ற காத்திருக்கும் அருண் விஜய்.. எவ்வளவு தெரியுமா

Share
24 665af598c430a
Share

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை பாலா இயக்கியுள்ளார். முதலில் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிப்பது வந்தார்.

படப்பிடிப்பு கூட விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென சூர்யா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார். பாலா மற்றும் சூர்யாவிற்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தான் இப்படத்திலிருந்து சூர்யா வெளியேற காரணம் என கூறப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் இல்லை என கூறி இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சூர்யா வெளியேறியதை தொடர்ந்து இப்படத்தில் அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார் பாலா.

அதன்படி, அருண் விஜய்யை வைத்து தற்போது வணங்கான் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த நிலையில், வணங்கான் திரைப்படத்தை மலைபோல் நம்பி காத்திருக்கிறாராம் அருண் விஜய்.

ஏனென்றால் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் அருண் விஜய், வணங்கான் திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் ரூ. 8 கோடியாக தனது சம்பளத்தை உயர்ந்த முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஷக்தி என்பவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...