1 eree
சினிமாசெய்திகள்

சூர்யா 45ல் இருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான்.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்

Share

சூர்யா 45ல் இருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான்.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா, புதிதாக கமிட் செய்திருக்கும் படம் சூர்யா 45. நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து, படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் த்ரிஷா, லப்பர் பந்து கதாநாயகி ஸ்வாசிகா, காளி வெங்கட், காஷ்மீரா ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

ரஹ்மான் – ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு கமிட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

வெளிவந்த அறிவிப்பு போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு முன் வந்த அனைத்து போஸ்டர்களிலும் ரஹ்மானின் பெயர் இடம்பெற்று இருந்த நிலையில், இந்த போஸ்டரில் பெயர் இடம்பெறாமல் இருந்தது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியுடன் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தகவல் வெளிவந்த நிலையில், சினிமாவிலிருந்து ஓராண்டு ஓய்வு எடுக்கப்போவதாக கூறப்பட்டது.

அதற்காக தான் தற்போது இப்படத்திலிருந்து விலகி இருக்கிறாரா? அல்லது படக்குழுவுடன் வேறு ஏதேனும் பிரச்சனையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சூர்யா 45 படக்குழுவினர் விரைவில் விளக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...