1 1 27
சினிமாசெய்திகள்

ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Share

ரஜினி படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா அனிருத்?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இன்றைய தேதியில் இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் அனிருத். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலே, அனிருத் இசை தான் ஒலிக்கிறது.

நம்பர் 1 இசையமைப்பாளர் என கூறப்படும் அனிருத், ஒரு படத்திற்காக ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் இசையமைக்க அனிருத் ரூ.17 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத் இசை தனி வரவேற்பை பெற்றது.

அவரின் பங்கும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. தற்போது, ஜெயிலர் 2 ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படம் குறித்த அப்டேட் வெளிவரும் என கூறப்பட்டது.

ஆனால், அவ்வாறு அப்டேட் வெளிவராமல் போனதற்கு அனிருத் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அவர் ரூ. 17 கோடி சம்பளமாக கேட்டதால் தயாரிப்பு தரப்பு தயக்கம் காட்டி வருவதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவதால் ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...