சினிமாசெய்திகள்

அமரன் புகழ் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர் யார் தெரியுமா ?

Share
24 67270de73dcd2 1
Share

அமரன் புகழ் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர் யார் தெரியுமா ?

பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 – ம் தேதி தீபாவளி அன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் உண்மை வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் முகுந்த் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படத்திற்கு 150 கோடிக்கும் மேல் வசூலுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து, பல சினிமா நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டியும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமரன் போன்ற ஒரு சிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க போகும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, அடுத்து ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷ் வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தனுஷ் ராயன் படத்தை முடித்து விட்டு ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் குபேரா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை முடித்துள்ளார். மேலும் இவர் கைவசம் இளையராஜா, Tere Ishk Mein ஆகிய படங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...