24 6725bd2861654
சினிமாசெய்திகள்

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

Share

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த கோட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் நடிகர் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு செல்வார். இதனால் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார் விஜய் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் துப்பாக்கியின் கணம் எப்படி இருக்கிறது, அடுத்த தளபதி நீங்கள் தானா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த அமரன் உலகளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி கொண்டு இருக்கிறது. இதுவரை உலகளவில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் மலேசியாவில் விஜய்யின் கோட் படத்தை மிஞ்சியுள்ளது.

ஆம், மலேசியாவில் அமரன் வெளிவந்து இரண்டாம் நாளில் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் வந்துள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 1.35 லட்சம் மக்கள் அமரன் படத்தை பார்க்க இரண்டாம் நாள் வந்துள்ளார்களாம்.

இதற்கு முன் இந்த சாதனையை லியோ படம் செய்திருந்த நிலையில், தற்போது லியோ, ஜெயிலர் என அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை அமரன் படைத்துள்ளது. மேலும் இது மலேசியாவில் இரண்டாம் நாளுக்கான விவரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...

world 30
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீர்மட்டம் குறைவு: நாளை மேலும் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு!

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, மேல்...

world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...