screenshot34673 down 1716874389
சினிமாசெய்திகள்

அப்பாவுக்கு புற்றுநோய், பண கஷ்டம், பாதியிலேயே நிறுத்திய படிப்பு- ஆல்யா மானசா வாழ்க்கையில் நடந்த சோகம்

Share

அப்பாவுக்கு புற்றுநோய், பண கஷ்டம், பாதியிலேயே நிறுத்திய படிப்பு- ஆல்யா மானசா வாழ்க்கையில் நடந்த சோகம்

சின்னத்திரையில் நுழைந்து ஹிட் சீரியல்கள் நடித்து சாதித்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.

அந்த லிஸ்டில் டாப்பில் இருப்பவர்களில் ஒருவர் தான் ஆல்யா மானசா.

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவருக்கு அந்த தொடரே வாழ்க்கையை தொடங்கவும் உதவியாக இருந்துள்ளது.

சஞ்சீவை காதலித்து திருமணம் செய்தவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தற்போது சன் தொலைக்காட்சியில் இனியா தொடரில் நடித்து வருகிறார், தொடருக்கு நல்ல டிஆர்பியும் உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.

காலையில் எழுவேன், மேக்கப் போட்டு முடி சரிசெய்து ஆடிஷனுக்கு செல்வேன். சிலநேரம் அவர்கள் கூறும் விஷயம் எனக்கு செட் ஆகாது, பல நேரம் அவர்களே என்னை அனுப்பிவிடுவார்கள்.

அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடி இருந்ததால் ஜிம் ட்ரெய்னராக வேலை பார்ப்பது, குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது, பாடலில் பின்னணியில் நடனம் ஆடுவது என பல வேலைகளை செய்தேன்.

சினிமாவில் முயற்சி செய்துகொண்டிருந்த எனக்கு ஒரு சமயம் சின்னத்திரை வாய்ப்பு வந்தது, அப்போது எனது அப்பாவும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே எனது அப்பாவை காப்பாற்ற சினிமா கனவை விட்டு சீரியல் வாய்ப்பை எடுத்துக்கொண்டேன்.

ஆனால் இப்போது ஒரு விஷயத்தை நினைத்து சந்தோஷம், காரணம் சினிமாவில் நடித்திருந்தால் தீபாவளி, பொங்கல் என தான் மக்கள் என்னை பார்த்திருப்பார்கள்.

இப்போது என்னை தினமும் பார்க்கிறார்கள், எனக்கு அதுவே சந்தோஷம் என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...