சினிமாசெய்திகள்

அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed

Share

அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed

அயோத்தி ராமர் கோயில் அருகே கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.

தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தியில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வருமானமும் பெருகியுள்ளது. இந்த நேரத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், KFC கடையில் சைவ உணவுகளை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. ராமர் கோயிலில் இருந்து 5 கி.மீ தொலையில் உணவு விற்பனை நிலையங்கள் இயங்கி வருகிறது. அதில் இறைச்சியையும், மதுபானங்களையும் விற்பனை செய்யக் கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அங்கு ஏற்கனவே, Dominos, Pizza Hut போன்ற கடைகளில் சைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...