30 1
சினிமா

‘ரசிகர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார்’ – நடிகை சினேகா

Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் கார் ரெஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருதையும் வென்றார்.

அஜித் குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை சினிமா அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

நடிகை சினேகா அஜித்துடன் ஜனா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் குறித்து தான் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது “படப்பிடிப்பில் அஜித் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுவார்கள். அவர்களிடம் அஜித் அமைதியாக லைனில் வாங்க, நான் போட்டோ கொடுக்கிறேன் என்பார். படப்பிடிப்பு முடிந்து பொறுமையாக இருந்து அனைவரிடமும் போட்டோ எடுத்துக்கொண்டு தான் செல்வார்.

அவ்வளவு பொறுமையாக ஓவ்வொரு ரசிகருடனும் அஜித் போட்டோ எடுத்துக்கொள்வார். அதை பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவ்ளோ எளிமையாக அஜித் இருப்பார். அவரை போல அவரின் ரசிகர்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அஜித் நினைப்பார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...