24 663706d275028
சினிமாசெய்திகள்

விஜய் இடத்தை பிடித்த அஜித்.. முதல் முறையாக வெளிவந்த உண்மை

Share

விஜய் இடத்தை பிடித்த அஜித்.. முதல் முறையாக வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விஜய் மற்றும் அஜித். விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய்க்கு சொன்ன கதையில் அஜித் நடித்த தகவல் குறித்து பிரபல இயக்குனர் சுந்தர் சி, பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அது என்ன விஷயம் என்று பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் சுந்தர் சி ஒரு முறை விஜய்யை சந்தித்து படம் பண்ணுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். படத்தின் கதைக்களம் கூறி, வருடத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் சுந்தர் சி-யை நடிகர் அஜித் நேரில் சந்தித்து, நாம் இருவரும் ஒரு படம் பண்ணலாமா என கேட்டுள்ளார். விஜய்யுடன் வருட கடைசியில் தான் படம் பண்ண போகிறோம், அதற்குள் அஜித்துடன் ஒரு படம் பண்ணிவிடலாம் என முடிவு செய்துள்ளார் சுந்தர் சி.

ஆகையால், விஜய்க்கு சொன்ன கதையில் அஜித்தை நடிக்க வைத்து எடுத்துள்ளார். அது தான் உன்னைத்தேடி திரைப்படம் தான். இதன்பின் சுந்தர் சி-யம் விஜய்யும் இணையமுடியாமல் போய்விட்டது.

இதே போல் மூன்று முறை விஜய்யும், சுந்தர் சி-யும் இணைந்து படம் பண்ணலாம் என திட்டமிட்ட போதெல்லாம், அது நடக்காமல் போய்விட்டது. இதை இயக்குனர் சுந்தர் சி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...