24 662e125fcb8bb
சினிமாசெய்திகள்

நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்- ஓபனாக கூறிய நடிகை வரலட்சுமி

Share

நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்- ஓபனாக கூறிய நடிகை வரலட்சுமி

நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி.

பிஸியாக நடித்துக்கொண்டு வரும் இவர் அண்மையில் நிக்கோல் என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். எப்போது திருமணம் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் நிக்கோல் ஏற்கெனவே திருமணம் ஆனவர் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது என்றும் பணத்திற்காக தான் வரலட்சுமி நிக்கோலை திருமணம் செய்கிறார் என்று நிறைய பேச்சுகள் இடம்பெற்றன.

இதுகுறித்து வரலட்சுமி ஒரு பேட்டியில் பேசும்போது, நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன், என்னுடைய வருமானத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிகோலை பணத்திற்காக திருமணம் செய்கிறேன் என சிலர் கூறுகிறார்.

அதே பணம் என்னிடமும் உள்ளது, நான் எதற்காக பணத்திற்காக இன்னொருவரை திருமணம் செய்ய வேண்டும். நிக்கோல் எனக்கு அறிமுகம் ஆனபோது மனைவியுடன் தான் வாழ்ந்து வந்தார்.

எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நல்ல நட்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அவருடைய பரிவு மற்றும் பாசம், என்னுடைய புரொபஷன் மீது அவருக்கு இருக்கும் அக்கறை எல்லாவற்றையும் பார்த்து தான் எனக்கு காதல் வந்தது.

அப்போது கூட அவர் என்னுடைய அப்பா அம்மாவை நேரில் சந்தித்து என் மீது அவருக்கு இருக்கும் காதலை சொல்லி இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....