24 661e3e60bef80
சினிமாசெய்திகள்

கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Share

கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. அவர் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

முழுநேர அரசியலில் குஷ்பு களமிறங்கி இருந்தாலும் அவ்வப்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோருக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. Avni என்ற அவர்களது பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தான் வீட்டிற்கும் வைத்து இருக்கின்றனர்.

நடிகை குஷ்பு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு இருந்தார்.

அதில் தன்னிடம் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி இருப்பதாக கூறி இருந்தார். மேலும் பல சொகுசு கார்களின் மதிப்பையும் சேர்ந்து அவரிடம் 4.55 கோடிக்கு அசையும் சொத்துக்கள் இருக்கிறதாம்.

தங்கம் விலை இத்தனை வருடங்களில் ஏறி இருப்பதை கணக்கிட்டால் தற்போது இதனை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய்க்கும் மேல் வரும்.

அது மட்டுமின்றி 18 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருக்கிறதாம். ஆக மொத்தம் குஷ்புவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 25 முதல் 28 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் சுந்தர்.சியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...