24 6617a9e803b71
சினிமாசெய்திகள்

பிரம்மாண்டமாக தயாராகும் கங்குவா படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற சூர்யா- எவ்வளவு தெரியுமா?

Share

பிரம்மாண்டமாக தயாராகும் கங்குவா படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற சூர்யா- எவ்வளவு தெரியுமா?

சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் கங்குவா.

சிவா அவர்களின் இயக்கத்தில் சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் ஃபேண்டஸி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

இதில் சூர்யா நாயகனாக நடிக்க திஷா படானி, பாபி தியோல், நட்ராஜன், ஜகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை, அதோடு படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா 6 கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா ரூ. 28 கோடி வரை குறைவான சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

காரணம் 24 படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக போதிய கலெக்ஷன் பெறவில்லை. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

அப்பட நஷ்டத்தை ஈடுசெய்ய கங்குவா படத்திற்காக சூர்யா குறைவான சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ரம்ஜான் தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் ஸ்பெஷல் வீடியேோவை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...