8 3 scaled
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் கடைசி நாட்களில் நடந்த சோகம்

Share

நடிகர் ரகுவரனின் கடைசி நாட்களில் நடந்த சோகம்

தனித்துவமான குரல் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் நடிகர் ரகுவரன்.

உடல்நிலை சரியில்லாததால் நடிப்பதை நிறுத்தியிருந்த அவர் தனுஷ் கேட்டுக் கொண்டதற்காக யாரடி நீ மோகினி படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.

ஸ்டைலான, வித்தியாசமான குரல் கொண்டு மக்களை கவர்ந்த ரகுவரன் என்ற வில்லனின் இடம் இப்போதும் காலியாகவே உள்ளது என்றே கூறலாம்.

அவர் அளவிற்கு யாரும் சினிமாவில் வில்லனாக வரவில்லை. ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ரகுவரன் நடிகர் ரஜினியோடு பாட்ஷா, மனிதன், சிவா உட்பட பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

நடிகர் ரகுவரன் இறக்கும் கடைசி நேரத்தில் என்ன நடந்தது போன்ற விஷயங்கள் குறித்து அவரது சகோதரர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அண்ணன் எதற்காக குடித்தார் என்று எங்களுக்கு தெரியாது,

அப்படி ஒரு குடி பழக்கம் இருந்தது. நிஜ வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருந்ததாக எங்களுக்கு தெரியவில்லை. அவருடைய உடல் நிலை கடைசி காலத்தில் முடியாமல் போவதை அவரே உணர்ந்து இருந்தார்.

யாரடி நீ மோகினி படத்திற்கு உடல்நிலை மிகவும் மோசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைக்கேள்விப்பட்டதுமே நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை எல்லாம் நிறுத்திவிட்டு மருத்துவமனை வந்துவிட்டார், அவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம்.

அண்ணனின் இறப்பு ரஜினி அவர்களை பெரிதும் பாதித்தது, அவரின் கடைசி நாள் அன்று மருத்துவமனையிலேயே ரொம்ப நேரம் இருந்தார் என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...