சினிமாசெய்திகள்

விடாமுயற்சி, குக் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போகும் இயக்குனர்கள்… அடுத்து 2 பட தகவல்

Share

விடாமுயற்சி, குக் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போகும் இயக்குனர்கள்… அடுத்து 2 பட தகவல்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவரது படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவார்கள்.

கடைசியாக அஜித்தின் துணிவு படம் வெளியாகி இருந்தது, அதன்பின் அஜித் விக்னேஷ் சிவன் கதையில் நடிப்பதாக இருக்க பின் அந்த படம் கைவிடப்பட்டது.

பிறகு அஜித், மகிழ்திருமேனி கதையை தேர்வு செய்து விடாமுயற்சி என்ற படத்தில் நடித்தார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வந்தார். இந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும், அதை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

கங்குவா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிறுத்தை சிவா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து 5வது முறையாக அஜித்துடன் இணைய உள்ளதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

அதேபோல் கேஜிஎஃப் மற்றும் சலார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல்-அஜித் கூட்டணி இணைய இருப்பதாகவும் சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...