90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கா?

24 66cd8a76d44c8 md

90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர் வினீத்தை நியாபகம் இருக்கா?

தமிழ் சினிமாவில் 90களில் டாப் நாயகனாக கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் வினீத்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

ஆவாரம் பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் வினீத் தனது முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் வென்றார்.

இதனால் தமிழ்நாட்டின் திரைப்பட நடிகர் சங்கத்தின் சிறந்த புதுமுகம் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அதன்பின் ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

நடிகர் வினீத் ஒரு சிறந்த நாயகனாக மட்டுமில்லாமல் பரதநாட்டிய கலைஞராக பல பரதநாட்டிய கச்சேரிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர், பரதநாட்டிய கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முக திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

2004ம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு மகளும் உள்ளார்.

 

Exit mobile version