24 6642de2975a75
சினிமாசெய்திகள்

500 கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி.. அதுவும் இவருக்காக தான்

Share

500 கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி.. அதுவும் இவருக்காக தான்

இந்தியளவில் தற்போது ரூ. 500 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட வரும் பிரம்மாண்ட திரைப்படம் கல்கி AD 2898. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

பிரபாஸ் ஹீரோவாக நடிக்க உலக நாயகன் கமல் ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்ட முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம்.

சமீபத்தில் கூட அமிதாப் பச்சன் கதாபாத்திரம் குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கல்கி AD 2898 திரைப்படத்தில் கேமியோ ரோலில் இயக்குனர் ராஜமௌலி நடிக்கவுள்ளாராம். பல இயக்குனர்கள் இதற்குமுன் இவரை நடிப்பதற்காக அழைத்தும் போகாத ராஜமௌலி, பிரபாஸ் இப்படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டவுடன் ஓகே என சொல்லிவிட்டாராம்.

ஏனென்றால் பிரபாஸை தனது மாணவனாகவே நினைக்க துவங்கிவிட்டாராம் ராஜமௌலி. அதனால் தான் பிரபாஸ் இப்படியொரு விஷயத்தை கேட்டவுடன் நோ சொல்லாமல் சரி என கூறி கல்கி AD 2898 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ராஜமௌலி ஒப்புக்கொண்டுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...

7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்...

8 7
உலகம்செய்திகள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பின் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காக...