3 46
சினிமாசெய்திகள்

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர்

Share

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர்

2024ஆம் ஆண்டு மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டிமான்டி காலனி 2. கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த டிமான்டி காலனி முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை நாம் அறிவோம்.

அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து வெளிவந்த டிமான்டி காலனி 2 சிறந்த வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் திரைக்கதையோடு இயக்குனர் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தனர்.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்த இப்படத்தின், மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூட மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்திருந்தார் அஜய் ஞானமுத்து.

இந்த நிலையில், டிமான்டி காலனி 3 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை இயக்குனர் அஜய் ஞானமுத்து துவங்கி இருக்கிறாராம்.

ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...