3 46
சினிமாசெய்திகள்

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர்

Share

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர்

2024ஆம் ஆண்டு மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டிமான்டி காலனி 2. கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த டிமான்டி காலனி முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை நாம் அறிவோம்.

அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து வெளிவந்த டிமான்டி காலனி 2 சிறந்த வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் திரைக்கதையோடு இயக்குனர் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தனர்.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்த இப்படத்தின், மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூட மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்திருந்தார் அஜய் ஞானமுத்து.

இந்த நிலையில், டிமான்டி காலனி 3 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை இயக்குனர் அஜய் ஞானமுத்து துவங்கி இருக்கிறாராம்.

ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...