6 17
சினிமாசெய்திகள்

கைவிடப்படுகிறதா தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா

Share

கைவிடப்படுகிறதா தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல் காச, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதப்போகிறார் என கூறப்பட்டது.

ஆனால் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் விலகினார். இருப்பினும், தனுஷ் குபேரா படத்தில் நடித்து முடித்து விட்டு இளையராஜா படத்தில் நடிப்பார் என எதிர்பாக்கப்பட்டது.

ஆனால், அதன் பின் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இளையராஜாவின் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாலும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...