2 5
சினிமாசெய்திகள்

அஜித்துடன் பில்லா 3..? இயக்குனர் விஷ்ணு வர்தன் கொடுத்த மாஸ் அப்டேட்

Share

அஜித்துடன் பில்லா 3..? இயக்குனர் விஷ்ணு வர்தன் கொடுத்த மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில் விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவுள்ளனர். அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் விஷ்ணு வர்தன்.

பில்லா, ஆரம்பம் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கியுள்ளார். இவர்களுடைய கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் விஷ்ணு வர்தன் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது, பில்லா 3 குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “பில்லா 3 பண்ணல, அதுக்கு பதிலா அஜித் சார் கூட வேறொரு படம் பண்ணலாம்” என கூறியுள்ளார்.

பின் அஜித் – விஷ்ணு வர்தன் – யுவன் காம்போ மீண்டும் எப்போது இணையும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குனர் விஷ்ணு வர்தன் “பேசிட்டு இருக்கோம்” என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு செம மாஸ் அப்டேட்டாக வந்துள்ளது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...