24 6725bd2861654
சினிமாசெய்திகள்

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

Share

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த கோட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் நடிகர் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு செல்வார். இதனால் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார் விஜய் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் துப்பாக்கியின் கணம் எப்படி இருக்கிறது, அடுத்த தளபதி நீங்கள் தானா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த அமரன் உலகளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி கொண்டு இருக்கிறது. இதுவரை உலகளவில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் மலேசியாவில் விஜய்யின் கோட் படத்தை மிஞ்சியுள்ளது.

ஆம், மலேசியாவில் அமரன் வெளிவந்து இரண்டாம் நாளில் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் வந்துள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 1.35 லட்சம் மக்கள் அமரன் படத்தை பார்க்க இரண்டாம் நாள் வந்துள்ளார்களாம்.

இதற்கு முன் இந்த சாதனையை லியோ படம் செய்திருந்த நிலையில், தற்போது லியோ, ஜெயிலர் என அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை அமரன் படைத்துள்ளது. மேலும் இது மலேசியாவில் இரண்டாம் நாளுக்கான விவரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...