tamilni 58 scaled
சினிமாசெய்திகள்

ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு வளர்ப்பு மகன் காரணமா? பிரபல பத்திரிகையாளரின் அதிர்ச்சி தகவல்..!

Share

ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு வளர்ப்பு மகன் காரணமா? பிரபல பத்திரிகையாளரின் அதிர்ச்சி தகவல்..!

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிய போகிறார்கள் என்றும் விரைவில் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

ஆர்த்திக்கு அடிக்கடி பார்ட்டிக்கு செல்லும் ஆடம்பர பழக்க வழக்கம் இருப்பதாகவும், அதை ஜெயம் ரவி கண்டித்ததாகவும் ஒரு பக்கம் வதந்திகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஜெயம் ரவியின் மாமியார் வீட்டில் வளர்ந்து வரும் வளர்ப்பு மகனால் தான் பிரச்சனை என்று பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் என்பவர் ஒரு பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி மாமியார் சுஜாதா வீட்டில் சங்கர் என்ற ஒரு வளர்ப்பு மகன் வளர்ந்து வருவதாகவும் அவர்தான் தயாரிப்பு பணிகளை முழுமையாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் சபிதா ஜோசப் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கும் சங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சங்கர் சொல்வதை தான் ஜெயம் ரவி கேட்க வேண்டும் என்று அவரது மாமியார் சுஜாதா அறிவுறுத்தியதாகவும் அப்போதுதான் ஜெயம் ரவியின் ஈகோ வெளியே வந்ததாகவும் அதனால் தான் ஆர்த்தி மீது அந்த கோபத்தை காட்டியதால் தற்போது விவாகரத்து வரை வந்திருப்பதாகவும் சபீதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் அனைத்து புகைப்படங்களையும் ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் நீக்கியதில் இருந்து கிட்டத்தட்ட பிரிவு உறுதியாகியுள்ள நிலையில் இந்த பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது புதிதாக வளர்ப்பு மகன் விவகாரமும் பரவி வருவதையடுத்து பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரின் மனதிற்குள் மட்டுமே தெரியும் ரகசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...