1720512 meena husband scaled
சினிமாசெய்திகள்

எனது கணவர் ஆசைப்பட்டு இதுவரை எதுவும் கேட்டது இல்லை… எமோஷ்னலான மீனா

Share

எனது கணவர் ஆசைப்பட்டு இதுவரை எதுவும் கேட்டது இல்லை… எமோஷ்னலான மீனா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மீனா.

அதன்பின் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர் முன்னணி நாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், சத்யராஜ் என பலருடன் படங்கள் நடித்துள்ளார்.

கண்ணழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

தில்லானா தில்லானா என இடுப்பை ஆட்டி ரசிகர்களை மயக்க வைத்தவரை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் விஜய்யுடன் தெறி பின் சில படங்களில் நடித்தவர் இப்போது படிப்பு முக்கியம் என இருக்கிறாராம்.

அண்மையில் ஒரு பேட்டியில் மறைந்த தனது கணவர் வித்யாசாகர் குறித்து நடிகை மீனா பேசுகையில், எனது கரியர் மீது என்னைவிட எனது கணவர்தான் முக்கியத்துவம் கொடுத்தார். நான் சமைத்து எனது கணவர் சாப்பிட்டிருக்கிறார்.

வித்யாசாகர் நன்றாகவே சமைப்பார், ஆனால் என்னிடம் இதை செய்துகொடு அதை செய்துகொடு என்று ஆசையாக கேட்டதே இல்லை என எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...