24 666e673c89ed2
சினிமாசெய்திகள்

விஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ

Share

விஷ்ணு விஷாலின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.. யார் தெரியுமா, அறிவிப்பு இதோ

தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இவர் மீண்டும் ராம் குமாருடன் கூட்டணி அமைந்துள்ளார். இது ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் First லுக் போஸ்டர் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தான் விஷ்ணு விஷால் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தான் தயாரிக்கவுள்ளார்.

பாடலாசிரியர், நடிகராக வலம் வந்த அருண்ராஜா காமராஜ் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி எனும் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...