screenshot834831 1693890847
சினிமாசெய்திகள்

காதல் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை..! யார் தெரியுமா

Share

தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஜூலை மாதம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் தான் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை முடித்த கையோடு தனுஷ் இந்தியில் உருவாகவுள்ள திரைப்படம் Tere Ishk Mein. இப்படத்தை தனுஷின் ஆஸ்தான இயக்கினர்களில் ஒருவரான ஆனந்த் எல். ராய் இயக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அம்பிகாபதி மற்றும் அத்ராங்கி ரே ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்து Tere Ishk Mein திரைப்படம் காதல் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். மேலும் இதில் விமான படை குறித்தும் பேசப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளாராம். கிட்டதட்ட இப்படத்தில் கியாரா அத்வானி நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
hindutamil prod 2025 11 23 2thuvwy1 3 4 1
பொழுதுபோக்குசினிமா

மத ரீதியான பாகுபாட்டால் வாய்ப்புகள் பறிபோகின்றன: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்தால் இந்தியாவில் பெரும் சர்ச்சை!

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் திரையுலகில் நிலவும் மறைமுகமான “மத ரீதியான பாகுபாடு”...

MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...