screenshot18344 1637164061
சினிமாசெய்திகள்

கார்த்திகை தீபம் சீரியல் நடிகர் கார்த்திக ராஜ் தவறானவரா, படப்பிடிப்பில் எப்படி நடந்துகொண்டார்- நடிகை அதிரடி பதில்

Share

கார்த்திகை தீபம் சீரியல் நடிகர் கார்த்திக ராஜ் தவறானவரா, படப்பிடிப்பில் எப்படி நடந்துகொண்டார்- நடிகை அதிரடி பதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகர் கார்த்திக் ராஜ்.

இந்த சீரியல்கள் பெரிய ஹிட், அடுத்ததாக அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்த செம்பருத்தி தொடரில் நாயகனாக நடித்து வந்தார்.

டிஆர்பியில் முதல் இடம் எல்லாம் பிடித்த இந்த தொடரில் இருந்து தயாரிப்பு குழுவுடன் ஏற்பட்ட தகராறால் பாதியிலேயே வெளியேறினார் கார்த்திக். பின் படம் நடிக்க போகிறேன் என இயக்கி, நடிக்க அப்படம் சரியான அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் தான் மீண்டும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த தொடர், எப்போது, முழு விவரம்
விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த தொடர், எப்போது, முழு விவரம்
இந்த தொடரில் கார்த்திக் அம்மாவாக மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் இந்த தொடர் குறித்தும், கார்த்திக் பற்றியும் பேசியுள்ளார். அதில் அவர், இந்த சீரியலில் கமிட்டானபோது கார்த்திக் ராஜ் பற்றி எல்லோரும் தவறாக பேசினார்கள், அந்த நேரத்தில் சில சர்ச்சைகளும் வந்தது.

ஆனால் சீரியலில் நான் அவரோடு நடித்த பிறகுதான் எனக்கு அவரைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தது. சீரியலில் நான் அவருக்கு அம்மாவாக நடிப்பதால் நிஜத்திலும் அம்மாவிடம் பழகுவது போல் தான் நடந்துகொள்வார்.

நிஜத்தில் நாம் ஒருவரோடு பழகும்போது தான் அவரைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. நான் இப்போது கார்த்திக் ராஜ் பற்றி நன்றாக புரிந்துகொண்டேன் என நல்ல விதமாக கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...