24 6642de2975a75
சினிமாசெய்திகள்

500 கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி.. அதுவும் இவருக்காக தான்

Share

500 கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கும் இயக்குனர் ராஜமௌலி.. அதுவும் இவருக்காக தான்

இந்தியளவில் தற்போது ரூ. 500 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட வரும் பிரம்மாண்ட திரைப்படம் கல்கி AD 2898. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

பிரபாஸ் ஹீரோவாக நடிக்க உலக நாயகன் கமல் ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்ட முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம்.

சமீபத்தில் கூட அமிதாப் பச்சன் கதாபாத்திரம் குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கல்கி AD 2898 திரைப்படத்தில் கேமியோ ரோலில் இயக்குனர் ராஜமௌலி நடிக்கவுள்ளாராம். பல இயக்குனர்கள் இதற்குமுன் இவரை நடிப்பதற்காக அழைத்தும் போகாத ராஜமௌலி, பிரபாஸ் இப்படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டவுடன் ஓகே என சொல்லிவிட்டாராம்.

ஏனென்றால் பிரபாஸை தனது மாணவனாகவே நினைக்க துவங்கிவிட்டாராம் ராஜமௌலி. அதனால் தான் பிரபாஸ் இப்படியொரு விஷயத்தை கேட்டவுடன் நோ சொல்லாமல் சரி என கூறி கல்கி AD 2898 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ராஜமௌலி ஒப்புக்கொண்டுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...