சினிமாசெய்திகள்

வாரிசு நடிகரை ஆபிஸுக்கு அழைத்து அவமானப்படுத்தினாரா மணி ரத்னம்.. கோபத்தில் வெளியேறிய நடிகர்

24 661e5a69cb59e
Share

வாரிசு நடிகரை ஆபிஸுக்கு அழைத்து அவமானப்படுத்தினாரா மணி ரத்னம்.. கோபத்தில் வெளியேறிய நடிகர்

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். கடைசியாக பொன்னியின் செல்வன் படம் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

இதை தொடர்ந்து தற்போது கமலுடன் தக் லைஃப் படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தில் கமிட்டாகி நடிக்கவிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இருவரும் மீண்டும் படத்தில் இணைந்துவிட்டார்களாம்.

இதில் நடிகர் துல்கர் சல்மான் வெளியேறியதற்கு காரணம் மணி ரத்னம் செய்த விஷயம் தான் என திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. துல்கர் சல்மானை தனது ஆபிஸுக்கு அழைத்துள்ளார். ஆனால், இயக்குனர் மணி ரத்னம் அதே ஆபிஸில் இருந்துகொண்டு துல்கர் சல்மானிடம் வந்த பேசவில்லையாம்.

தன்னுடைய துணை இயக்குனரை அனுப்பிவைத்தாராம். இதனால் கடுப்பாகி தான் துல்கர் சல்மான் தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சொல்லப்படுகிறது. பின் மணி ரத்னத்தின் மனைவியும், பிரபல நடிகையுமான சுஹாசினி, துல்கர் சல்மானிடம் பேசி படத்தில் மீண்டும் இணைய வைத்துள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

ஆனால், மணி ரத்னம் அப்படி செய்யக்கூடிய நபர் இல்லை என்றும், இதுபோல் ஒரு விஷயம் நடக்கவே இல்லை , இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...