சினிமாசெய்திகள்

முடிவுக்கு வந்த சூரி – விஷ்ணு விஷால் சண்டை! ஒன்றாக வெளியிட்ட போட்டோ

6 3 scaled
Share

முடிவுக்கு வந்த சூரி – விஷ்ணு விஷால் சண்டை! ஒன்றாக வெளியிட்ட போட்டோ

நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த போதிருந்தே நண்பர்களாக இருந்து வந்தனர். அந்த படத்தில் வரும் பரோட்டா காமெடி தான் சூரியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது அந்த படம். அதற்கு பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்த நிலையில் சூரி அதில் பலவற்றில் சூரி காமெடியனாக நடித்தார்.

குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உட்பட பல படங்களில் இந்த கூட்டணி நடித்து இருக்கிறது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடியும் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே ஒரு பெரிய சிக்கல் வெடித்தது. நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் அப்பா 2.7 கோடி ருபாய் வாங்கி ஏமாற்றிவிட்டார் என சூரி புகார் அளித்தார்.

நீண்ட காலமாக இருந்த இந்த பிரச்சனையில் தற்போது தீர்வு கிடைத்து இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு மூன்றாவது நபர் தான் காரணம் என தெரியவந்ததால் சூரி சமரசம் அடைந்து இருக்கிறார்.

தற்போது விஷ்ணு விஷால் மற்றும் அவர் அப்பா இருவரும் சூரி உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கின்றனர்.

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என சூரி பதில் அளித்து இருக்கிறார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...