சினிமா
நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. 10 வருடங்களுக்கு முன் எடுத்த படம் பற்றி சுந்தர்.சி
நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. 10 வருடங்களுக்கு முன் எடுத்த படம் பற்றி சுந்தர்.சி
சுந்தர் சி தற்போது அரண்மனை 4 என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் சுந்தர் சி உடன் தமன்னா, ராசி கண்ணா உள்ளிட்ட பலரும் கிளாமராக கலந்துகொண்டனர்.
அந்த பிரெஸ் மீட்டில் செய்தியாளர்கள் சுந்தர் சி 10 வருடங்களுக்கு முன் இயக்கிய மதகஜ ராஜா படம் வெளிவருமா என கேள்வி எழுப்பினர்.
“மதகஜ ராஜா படம் தற்போது வந்தாலும் நல்ல என்டர்டெயின்மென்ட் ஆக இருக்கும். அந்த படத்தின் மீது எந்த கடக்கும் இல்லை, தயாரிப்பாளரின் முந்தைய படத்தின் கடனால் இதை நிறுத்தி வைத்திருக்கின்றனர்.”
“படத்தை நாங்களே வாங்கி கொள்கிறோம் என நானும் விஷாலும் கெஞ்சி கூட பார்த்துவிட்டோம், அவர் தரவில்லை” என சுந்தர் சி கூறி இருக்கிறார்.