tamilni 3 scaled
சினிமாசெய்திகள்

படத்தை தியேட்டரில் பாருங்க.. படம் பிடிக்கல என்றா என்னை செருப்பால் அடியுங்க..! ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் பகிர்

Share

படத்தை தியேட்டரில் பாருங்க.. படம் பிடிக்கல என்றா என்னை செருப்பால் அடியுங்க..! ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் பகிர்

தமிழ் சினிமாவில் திட்டம் இரண்டு மற்றும் ஜிவி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் தற்போது இயக்கிய படம் தான் ஹாட்ஸ்பாட்.

இந்த படத்தில் கௌரி கிஷன், ஆதித்யா, பாஸ்கர், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கலையரசன், ஜனனி ஐயர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாத் இசையமைத்துள்ளார்.

நான்கு கதைகளை கொண்ட இந்த படம் சுவாரஸ்யமான திரைக்கதை உடன் எடுக்கப்பட்டு இருப்பதாக சிறப்பு திரையிடலை பார்த்த விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். இந்தப் படம் கடந்த மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குனர் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

இப்போதெல்லாம் பெரிய ஸ்டார்களின் படங்களைத் தவிர சின்ன படங்களை முதல் நாள் வரவேற்பதில்லை. ஒருவாரத்திற்கு அத்தனை படங்களும் வெளியாகின்றன. ஆனால் கூட்டம் வராதால் அந்த படங்கள் இரண்டு நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடுவதில்லை. இப்படியான சூழலில் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தான் இந்த படத்தின் பெயரை அப்படியே வெளியிட்டோம்.

ஆனால் உண்மையில் ஒரு நல்ல கருத்தை சுவாரஸ்யமாக இந்த படத்தில் சொல்ல முயற்சித்து தான். படம் பார்த்த எல்லா தரப்பில் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் எதிர்பார்த்த கூட்டம் படத்திற்கு கிடைக்கவில்லை. இந்தப் படத்தை திரையரங்கில் வந்து பாருங்கள். உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....