24 6604f69b2aef9
சினிமாசெய்திகள்

மறைந்த நடிகர் சேஷு கடைசியாக அனுப்பிய மெசேஜ்- இத்தனை லட்சம் இல்லாமல் உயிர் போனதா?

Share

மறைந்த நடிகர் சேஷு கடைசியாக அனுப்பிய மெசேஜ்- இத்தனை லட்சம் இல்லாமல் உயிர் போனதா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக பேசப்படுகிறது, அதில் ஒரு நிகழ்ச்சி தான் லொள்ளு சபா.

இந்த நிகழ்ச்சி மூலம் எத்தனையோ கலைஞர்கள் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து உயர்ந்துவிட்டார்கள், சிலர் இன்னும் தங்களது திறமையை நிரூபிக்கும் வகையில் படம் அமையாமல் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர்.

அப்படி லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றியை கண்டவர் நடிகர் சேஷு. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகர் சேஷுவின் மறைவு குறித்து வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனர் கார்த்தி யோகி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

அதில் அவர், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பரதநாட்டியம் சீம் எடுக்குப்போது அவருக்கு 45 வயது தான் என்று நினைத்தேன், ஆனால் மருத்துவமனையில் இருக்கும் போது தான் அவருக்கு 60 வயது என தெரியும்.

அவர் பேசுற டயலாக் எல்லாமே காமெடியாக இருக்கும். மற்ற காமெடி நடிகர்கள் ஒரு வரியில் பன்ச் மாதிரி சொல்வார்கள். ஆனால், சேஷு எல்லாம் பாடி லாங்குவேஜ் காமெடி பண்ணி அசத்துவார்.

பரதநாட்டியம் வீடியோ ஒரு மில்லியன் போய்விட்டது, செம வைரல் ஆகிடுச்சு சந்தோசமாக இருக்கு என்று சொன்னார். உடனே நான் அதை ரிபோர்ட் பண்ணி டெலிட் பண்ண சொல்றேன் என்றேன்.

உடனே அவர், அதெல்லாம் பண்ணிடாதீங்க, நமக்கு ரீச் ஆனா சரி தான் என அவர் கடைசியாக எனக்கு மருத்துவமனை செல்வதற்கு முன் மெசேஜ் செய்தார்.

எல்லோருக்கும் ஓடிப்போய் உதவிய சேஷு அவர்களின் உயிரை காப்பாற்ற ரூ. 10 லட்சும் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...