tamilni 143 scaled
சினிமாசெய்திகள்

முகேஷ் அம்பானியின் சின்ன மருமகளான நடன அழகி..! உண்மையில் இவர் யார்? என்ன பின்னணி தெரியுமா?

Share

முகேஷ் அம்பானியின் சின்ன மருமகளான நடன அழகி..! உண்மையில் இவர் யார்? என்ன பின்னணி தெரியுமா?

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்டின் ப்ரி வெட்டிங் பங்க்ஷன் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் உலக அளவில் காணப்பட்ட முக்கியஸ்தர்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள்

இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் மருமகளான ராதிகா மெர்சென்ட் உண்மையில் யார்? இவரின் முழு பின்னணி என்ன? என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முக்கிய மருந்து உற்பத்தி நிறுவனமான எண்கோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி விய்ரன் மெர்சன்ட்டினின் மகள் தான் ராதிகா மெர்சென்ட்.

மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். அரசியல் மற்றும் பொருளியல் துறையில் அவர் இளங்கலை பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இஷ்பிரவா என்ற கட்டுமான நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக சில காலம் பணிபுரிந்த ராதிகா, தற்போது எண்கோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திலும் பல ஆண்டுகாலம் பயிற்சி பெற்று வந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நடன அரங்கேற்றத்தைத் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.

பள்ளி பருவத்திலேயே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா இருவருக்கும் இடையில் அறிமுகம் இருந்ததாக கூறப்படுகிறது.

எண்கோ மட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ராதிகாவின் பெற்றோர்கள் நடத்தி வருகின்றனர். இவற்றின் நிகர மதிப்பு 750 கோடி ரூபாய் என கூறப்படுகிறது

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...