tamilni 143 scaled
சினிமாசெய்திகள்

முகேஷ் அம்பானியின் சின்ன மருமகளான நடன அழகி..! உண்மையில் இவர் யார்? என்ன பின்னணி தெரியுமா?

Share

முகேஷ் அம்பானியின் சின்ன மருமகளான நடன அழகி..! உண்மையில் இவர் யார்? என்ன பின்னணி தெரியுமா?

உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சென்டின் ப்ரி வெட்டிங் பங்க்ஷன் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் உலக அளவில் காணப்பட்ட முக்கியஸ்தர்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள்

இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் மருமகளான ராதிகா மெர்சென்ட் உண்மையில் யார்? இவரின் முழு பின்னணி என்ன? என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முக்கிய மருந்து உற்பத்தி நிறுவனமான எண்கோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி விய்ரன் மெர்சன்ட்டினின் மகள் தான் ராதிகா மெர்சென்ட்.

மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். அரசியல் மற்றும் பொருளியல் துறையில் அவர் இளங்கலை பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இஷ்பிரவா என்ற கட்டுமான நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக சில காலம் பணிபுரிந்த ராதிகா, தற்போது எண்கோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திலும் பல ஆண்டுகாலம் பயிற்சி பெற்று வந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நடன அரங்கேற்றத்தைத் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.

பள்ளி பருவத்திலேயே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா இருவருக்கும் இடையில் அறிமுகம் இருந்ததாக கூறப்படுகிறது.

எண்கோ மட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ராதிகாவின் பெற்றோர்கள் நடத்தி வருகின்றனர். இவற்றின் நிகர மதிப்பு 750 கோடி ரூபாய் என கூறப்படுகிறது

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...