tamilni 131 scaled
சினிமாசெய்திகள்

பணக்கார திமிரா? தந்தை பாசமா? மகனின் ப்ரீ வெட்டிங்கில் ஆடிப்பாடிய பிரபலங்களுக்கு பல கோடிகளை அள்ளி வீசிய முகேஷ் அம்பானி!

Share

பணக்கார திமிரா? தந்தை பாசமா? மகனின் ப்ரீ வெட்டிங்கில் ஆடிப்பாடிய பிரபலங்களுக்கு பல கோடிகளை அள்ளி வீசிய முகேஷ் அம்பானி!

உலகமே வியக்கும் அளவுக்கு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரி வெட்டிங் பங்க்ஷன் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமானவர்கள், நட்சத்திரங்கள், டாப் பாடகி என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆயிரம் கோடி செலவழித்து அமர்க்களப்படுத்தியிருந்தார் முகேஷ் அம்பானி.

மார்ச் முதலாம் தேதி முதல் 3ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு பல நூறு கோடி செலவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பிரபல பாடகி ரிஹானாவின் பாடல் மற்றும் நடனம், முகேஷ் – நீத்தா அம்பானியின் நடனம், ஆனந்த் – ரித்திகாவின் ரொமாண்டிக் டான்ஸ் மற்றும் ஆனந்த் அம்பானியின் எமோஷனல் பேச்சு என்பன பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்திய விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பாலிவுட் பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கத்ரீனா – விக்கி கௌஷல் தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் நடனம் ஆடுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடிக்கு ஒரு கோடி ரூபாயும், நடிகர் அக்ஷய் குமாருக்கு 1.5 கோடியும், நடனம் ஆடுவதற்கு தனியாக 3.5 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல சல்மான்கான் பங்கேற்க இரண்டு கோடியும், நடனம் ஆடுவதற்கு தனியாக 3 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கானுக்கு நடனமாட மட்டும் மூன்று கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...