சினிமாசெய்திகள்

இதில் ரீமேக்கெல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க புதிய ஐடியா..! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

Share
tamilni 109 scaled
Share

இதில் ரீமேக்கெல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க புதிய ஐடியா..! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

விஜய் நடிக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், அதன் இயக்குநர் வெங்கட் பிரபு சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் விஜயின் கோட் படம் பற்றி பேசியுள்ளார் வெங்கட் பிரபு.

அதன்படி அவர் கூறுகையில், விஜய் நடிக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. முதல் சிங்கிள் மே மாதம் வெளியாகலாம். இப்படம் ரீமேக் எல்லாம் கிடையாது. புதிய ஐடியா.

இந்த மாதத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிடும். அடுத்த ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும்தான் உள்ளது. அத்துடன் படம் முடிந்துவிடும். இதில் நிறைய பாடல்கள் உள்ளன. நன்றாக என்ஜாய் பண்ணலாம். நிறைய நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

ஒரு ரசிகனாக விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன். படத்தில் நிறைய கிராபிக் வேலைகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. அதனால் இப்போது படம் வெளியிடுவது குறித்தோ மற்ற விவரங்கள் குறித்தோ சொல்ல முடியாது. பண்டிகை நாளில் படம் வெளியாகலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...