tamilni 41 scaled
சினிமாசெய்திகள்

டாப் ஹீரோக்களுக்கு பேரிடியாய் விழுந்த ஷாக்கிங் நியூஸ்! ரஜினி, கமல், அஜித்துக்கு சம்பள முடக்கமா? LYCA அதிரடி முடிவு

Share

டாப் ஹீரோக்களுக்கு பேரிடியாய் விழுந்த ஷாக்கிங் நியூஸ்! ரஜினி, கமல், அஜித்துக்கு சம்பள முடக்கமா? LYCA அதிரடி முடிவு
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’, கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’, மற்றும் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

இந்தப் படங்கள் மட்டுமின்றி நடிகர் விஜயின் மகன் இயக்க உள்ள படத்தையும் தொடர்ச்சியாக தயாரிக்க உள்ளது.

இந்த நிறுவனம் குறைந்த மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது. தற்போது இந்த படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படங்களை தயாரிப்பதன் மூலம் குறைந்த அளவிலேயே லாபம் வருவதாகவும், நஷ்டம் வந்தால் முழுமையாக வருவதாகவும் லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.

இதன் காரணமாக 30 முதல் 40 கோடிக்கு அதிகமான பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரிப்பது என்று முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி ஆகிய படங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டியதால் முன்னணி நடிகர்களின் சம்பளத்தை முடக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

தற்போது லைக்கா நிறுவனத்தில் இந்த அதிரடி முடிவை நினைத்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தாலும், முன்னணி நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....