tamilni 639 scaled
சினிமாசெய்திகள்

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

Share

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழுவினர் தொடர்பு கொண்ட போது அவர் மிகப்பெரிய தொகை கேட்டதாகவும் அதிலிருந்து ஒரு ரூபாய் குறைத்தால் கூட நடிக்க முடியாது என்று கூறியதாகவும் கசிந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 43’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் அவர் 3 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படத்தில் ஒரு சில லட்சங்கள் மட்டும் சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா, விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடிக்கும் போது கூட ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் வாங்கினார். ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ’அனிமல்’ என்ற ஹிந்தி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தனது சம்பளத்தை 3 கோடி முதல் 5 கோடி வரை அதிகரித்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் சூர்யா, சுதா கொங்கரா படத்திற்கு மூன்று கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு குறைந்து தன்னால் நடிக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ’சூர்யா 43’  பட குழுவினர் ராஷ்மிகா மந்தனா படத்திற்கே தேவை இல்லை என்று கூறிவிட்டு புதுமுக நடிகையை தேடி வருவதாகவும் ஒரு சில லட்சங்களில் புதுமுக நடிகைக்கு சம்பளம் கொடுத்தால் போதும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....