tamilni 639 scaled
சினிமாசெய்திகள்

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

Share

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழுவினர் தொடர்பு கொண்ட போது அவர் மிகப்பெரிய தொகை கேட்டதாகவும் அதிலிருந்து ஒரு ரூபாய் குறைத்தால் கூட நடிக்க முடியாது என்று கூறியதாகவும் கசிந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 43’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் அவர் 3 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படத்தில் ஒரு சில லட்சங்கள் மட்டும் சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா, விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடிக்கும் போது கூட ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் வாங்கினார். ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ’அனிமல்’ என்ற ஹிந்தி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தனது சம்பளத்தை 3 கோடி முதல் 5 கோடி வரை அதிகரித்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் சூர்யா, சுதா கொங்கரா படத்திற்கு மூன்று கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு குறைந்து தன்னால் நடிக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ’சூர்யா 43’  பட குழுவினர் ராஷ்மிகா மந்தனா படத்திற்கே தேவை இல்லை என்று கூறிவிட்டு புதுமுக நடிகையை தேடி வருவதாகவும் ஒரு சில லட்சங்களில் புதுமுக நடிகைக்கு சம்பளம் கொடுத்தால் போதும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...