images
சினிமாசெய்திகள்

கவுண்டமணி நிஜமான பெயர் என்ன தெரியுமா.. மாற்றியதே இந்த நடிகர் தானா

Share

கவுண்டமணி நிஜமான பெயர் என்ன தெரியுமா.. மாற்றியதே இந்த நடிகர் தானா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவின் உச்ச காமெடியனாக ஒரு காலத்தில் வலம் வந்தவர். நடிகர் செந்தில் உடன் சேர்ந்து அவர் செய்த காமெடி காட்சிகள் தற்போதும் பெரிய அளவில் பிரபலம்.

அவரது நக்கல் மற்றும் நையாண்டியான பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமீப காலமாக கவுண்டமணி ஹீரோவாக நடித்து வருகிறார். 49 ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்று படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் யோகி பாபுவும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

நடிகர் கவுண்டமணி நக்கல் மன்னன் என பெயர் எடுக்கும் அளவுக்கு counter வசனங்கள் பேசுவதில் வல்லவர். அவரது நிஜமான பெயரே கவுண்டமணி என்று தான் எல்லோரும் நினைத்திருப்பீர்கள். ஆனால் அவரது உண்மையான பெயர் சுப்பிரமணி.

பாக்யராஜின் ஒரு படத்தில் அவர் நடித்திருந்தார். அதன் டைட்டில் கார்டில் அவரது பெயர் கவுண்டமணி என பாக்யராஜ் எழுதி கொடுத்திருக்கிறார். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் அவர் பெயர் கவுண்டமணி அல்ல counter மணி என ஒருவர் பாக்யராஜிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிக்கும் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏதாவது கவுண்டர் வசனங்கள் கொடுத்து எல்லாரையும் சிரிக்க வைத்து விடுவார் அதனால் எல்லோரும் கவுண்டர் மணி என அழைத்தார்களாம். “அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. கவுண்டமணி என டைட்டில் கார்டில் ஏற்கனவே வந்துவிட்டதால் அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன் என பாக்கியராஜ் சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.

அதனால் கவுண்டமணி என பெயர் வர பாக்யராஜ் தான் காரணம் என தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

Share
தொடர்புடையது
17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...

14 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ரூ. 1,945 இலட்சம் மீளப் பெற்றுக்கொடுப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம்...