tamilni Recovered 12 scaled
சினிமாசெய்திகள்

மீண்டும் சந்திரமுகி கெட்டப்பில் கம்பேக் கொடுத்த ஜோதிகா! பாலிவுட்டை மிரட்டும் ‘சைத்தான்’ ட்ரெய்லர்

Share

பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரத்னா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய ஜோதிகாவின் சினிமா பயணம், அஜித்தின் வாலி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் குஷி, அர்ஜுனுடன் ரிதம், கமல்ஹாசனுடன் தெனாலி, சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்து இருந்தார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் போது அவருடன் காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்தரமுகி திரைப்படம் அவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தனது கெரியரில் பிஸியாக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, இறுதியாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ திரைப்படம் மூலம் மீண்டும் சந்திரமுகியாக கம்பேக் கொடுக்கவுள்ளார் ஜோதிகா.

இந்தியில் விகாஸ் பால் இயக்கியுள்ள சைத்தான் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்கி போடிவாலா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மிரட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...