சினிமாசெய்திகள்

அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed

Share

அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed

அயோத்தி ராமர் கோயில் அருகே கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.

தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தியில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வருமானமும் பெருகியுள்ளது. இந்த நேரத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், KFC கடையில் சைவ உணவுகளை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. ராமர் கோயிலில் இருந்து 5 கி.மீ தொலையில் உணவு விற்பனை நிலையங்கள் இயங்கி வருகிறது. அதில் இறைச்சியையும், மதுபானங்களையும் விற்பனை செய்யக் கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அங்கு ஏற்கனவே, Dominos, Pizza Hut போன்ற கடைகளில் சைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், KFC கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...