tamilni 229 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரியப் போகின்றார்களா?- உண்மை உடைத்த பிரபலம்- இது தான் காரணமா?

Share

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதேபோல மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கின்றார்.

சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 1000ம் கோடி வசூல் சாதனை செய்தது. இவரது நடிப்பில் இறுதியாக அன்னபூரணி திரைப்படம் வெளியாகியிருந்தது.இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் ஜெய்யும் நடித்திருந்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்திருக்கும் இவர் கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்திருந்தார்.இந்நிலையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வருங்காலத்தில் பிரிய வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் வேணுசாமி தெரிவித்துள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அடுத்தடுத்த சர்ச்சைகளிலும் பிரச்சினைகளிலும் சிக்கிவரும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வேணுசாமி கணித்த நிலையில், அதேபோல இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரிய வாய்ப்புள்ளதாக வேணுசாமி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...