5 14 scaled
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தாக்கட்டப்பட்ட வனிதா விஜயகுமார்.. முகத்தில் ரத்த காயம்.. அதிர்ச்சியிலும் சம்பவம்

Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தாக்கட்டப்பட்ட வனிதா விஜயகுமார்.. முகத்தில் ரத்த காயம்.. அதிர்ச்சியிலும் சம்பவம்

நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தன்னை ஒரு மர்ம நபர் அடித்ததாகவும், முகத்தில் காயம் ஏற்பட்ட பீளீடிங் ஆவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“என்னுடைய பிக் பாஸ் விமர்சனத்தை முடித்தபின், இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்தேன். எனது காரை தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தி இருந்தேன். காரின் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்முன் வந்தார். அவர் பிக் பாஸ் பிரதீப்பின் ஆதரவாளர் ஆவார்”.

“திடீரென அவர் என்னை கடுமையாக தாக்க துவங்கினார். ‘ரெட் கார்டு கொடுக்குறீங்களா, நீ வேற அதுக்கு சப்போர்ட்’ என கூறி முகத்தில் அடித்தார். வலியில் கத்தினேன், என் முகத்தில் ப்ளீடிங் ஆனது. அந்த நேரத்தில் என்ன சுற்றி வேறு யாருமே இல்லை, அப்போது இரவு 1 மணி இருக்கும்”.

”நான் என் தங்கையை கீழே வரச்சொல்லி அழைத்தேன். இதை போலீசில் கூறும்படி அவள் என்னை வற்புறுத்தினால். ஆனால் நான் இந்த செயலில் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என கூறினேன். அதன்பின் நான் முதல் உதவி எடுத்துக்கொண்டேன்”.

”என்னை தாக்கிய மர்ம நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்னை பார்த்து பைத்தியகாரன் போல் சிரித்தான். அடுத்த சில நாட்களுக்கு நான் ஆன் ஸ்க்ரீனில் வரப்போவதில்லை. இடையூறுகளை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது” என கூறி பதிவு செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...