3 10 scaled
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவிற்கு நடந்த கொடுமைகள்.. இதனால் தான் சினிமாவை விட்டு விலகினாரா.?

Share

பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவிற்கு நடந்த கொடுமைகள்.. இதனால் தான் சினிமாவை விட்டு விலகினாரா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கின்றன.. 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் கானா பாலா வெளியேறிய நிலையில் இந்த வாரம் மாயா, மணி, ரவீனா, அர்ச்சனா, விசித்திரா, பூர்ணிமா, அக்ஷயா, ப்ராவோ போன்றோர் நாமினேட் ஆகியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் 7-ல் ஒரு முக்கிய போட்டியாளர் விசித்திரா.. இவர் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மேலும் ஐட்டம் பாடலுக்கு பெயர் போனவர்.. இந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் அதிக வயதுடைய விசித்ரா கேம்மை புரிந்து கொண்டு சூப்பராக விளையாடுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு பூகம்பம் பற்றி கூற சொல்லி இருந்தனர்.. அப்பொழுது பேசிய விசித்ரா நான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை பார்த்து பெயர் கூட கேட்காமல், இந்த படத்துல நடிக்கிற இல்ல, ரூமுக்கு வா என்று கூறி அழைத்திருக்கிறார்.

ஆனால் அன்று இரவு நான் என்னோட ரூமுக்கு போய் தூங்கி விட்டேன் அதனால் எனக்கு அப்போதிலிருந்தே பல்வேறு சிக்கல்களை கொடுத்தார்கள் சாயங்காலமானால் குடித்துவிட்டு கதவை தட்டுவார், பிறகு நான் தங்கி இருந்த ஹோட்டல் மேனேஜரின் உதவியால் வேறு ஒரு அறைக்கு மாறினேன்.

அந்த மேனேஜர் தான் பிறகு என்னோட கணவரானார்.. பிறகு கிராமத்தில் சூட்டிங் நடக்கும் பொழுது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அதை நான் ஸ்டென்ட் மாஸ்டரிடம் கூறினேன் ஆனால் அவர் என்னை கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்..

மேலும் இது பற்றி நான் சங்கத்தில் புகார் அளித்ததற்கும் எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை இதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருமா என்று சொல்லி அந்த சங்கத் தலைவர் என்னை அனுப்பி வைத்துவிட்டார்.. இதையெல்லாம் நினைத்து தான் சினிமா துறையே வேண்டாம் என்று விலகி விட்டேன் என கண்ணீரோடு விசித்திரா பேசி இருக்கிறார்..

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...