2 1 scaled
சினிமாசெய்திகள்

ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள்

Share

ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள்

ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேர்மனியின் ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காரில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் வானை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டது உடன், எரிந்து கொண்டு இருந்த 2 பாட்டில்களையும் விமான நிலைய வளாகத்திற்குள் தூக்கி எறிந்தார்.

இதனால் விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அவசர விசாரணையை தொடங்கினர். அதில், விமான நிலையத்தின் பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு மர்ம நபரின் கார் உள்ளே வந்ததையும், காரில் 2 குழந்தைகள் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.

மர்ம நபர் விமான நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னதாக 2 குழந்தைகளை கடத்தி செல்வதாக அவருடைய மனைவியே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ம நபரின் இந்த திடீர் தாக்குதலால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, அனைத்து முனையங்களின் நுழைவு வாயில்களுக்கும் தற்காலிகமாக அடைக்கப்பட்டன.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...