என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!
சினிமாசெய்திகள்

என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!

Share

என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர். தற்போது மாமன்னன் படம் மூலமாக குணச்சித்திர நடிகராகவும் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார். அடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் பலருக்கும் தெரியாத வடிவேலுவின் இன்னொரு முகத்தை பற்றி நடிகர் காதல் சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

சுகுமார் வடிவேலு போலவே தோற்றத்தில் இருந்ததால் அவர் ராஜ் டிவியின் ஊர்வம்பு நிகழ்ச்சியில் வடிவேலு போலவே perform செய்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் வந்தது. தவசி என்ற படத்தில் அவர் வடிவேலு போலவே மேனரிசம் காட்டி நடித்து இருக்கிறார்.

அதே போல நடிக்க பல கம்பெனிகளில் இருந்து அவருக்கு வாய்ப்பு வர தொடங்கி இருக்கிறது. அப்போது வடிவேலு உடன் இருக்கும் நடிகர்கள் இருந்து பேர் வந்து சுகுமாரை வடிவேலுவிடம் அழைத்து சென்று இருக்கின்றனர்.

‘என்னை மாதிரி நடிப்பேன்னு கம்பெனி கம்பெனியா போய் சொல்லிட்டு இறுக்கியாமே’ என வடிவேலு கேட்டாராம். ‘அப்படி வாய்ப்பு வருகிறது, முதல் படம் என்பதால் நடித்துவிட்டேன், இனி நடிக்க மாட்டேன் அண்ணே’ என சுகுமார் பம்மி இருக்கிறார்.

அப்போது அங்கிருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு சுகுமாரை வடிவேலுவின் ஆட்கள் தாக்கினார்களாம். ரத்தம் வரும் அளவுக்கு அடித்து தான் அனுப்பினார்கள்.

இந்த அவமானத்தில் தவறான முடிவை எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டேன். என் மனைவி தான் என்னை தடுத்தார்.

அதற்கு பிறகு தான் காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதற்கு முன் இருந்த வடிவேலு சாயலே தெரியக்கூடாது என இயக்குனரிடம் சொல்லி முற்றிலும் வேறு விதமாக நடித்தேன் என சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...