முகத்தை மறைத்து பர்தாவுடன் ரயில் நிலையம் வந்த தமிழ் நடிகை!
பொதுவாக நடிகைகள் பொது இடத்திற்கு வந்தால் எவ்வளவு கூட்டம் கூடும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர்கள் உடன் செல்பி எடுக்கவும் அதிகம் பேர் வருவார்கள்.
இதனாலேயே பல பிரபலங்கள் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு பிரபல நடிகை பர்தா அணிந்து ரகசியமாக ரயில் நிலையம் வந்த வீடியோ தற்போது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சுப்ரமணியபுரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து இருக்கும் ஸ்வாதி ரெட்டி தான் இப்படி முகத்தை மறைத்து ரயில் நிலையம் சென்று இருக்கிறார். அவர் கணவரை விவாகரத்து செய்கிறார என சில தினங்களுக்கு முன்பு செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
Leave a comment